Monday, April 16, 2012

மீண்டும் வருகிறேன்

நீண்ட இடைவேளைக்குப் பிறகு மறுபடி பதிவுகள் பக்கம் வருகிறேன். சிவ(என்)புராணம் வலையில் எழுதி கிட்டத்தட்ட 6 வருடம் ஆகிவிட்டது. சென்னையில் இருந்து வேலை மாற்றி இப்போது கோவையில்.

குமரன் மல்லி, ராகவன், தாணு, பரஞ்சோதி, சிங் (செயகுமார்), கீதா, மோகன்ராஜ்(கைப்புள்ள), தாணு, ஜோ என்று ஒரு பெரிய நண்பர்கள் பட்டாளம் தமிழ்மணத்தில் இருந்தது. யாரெல்லாம் இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.

எனக்குப் பிடித்த சிலவற்றை பற்றி எழுதலாம் என்று இருக்கிறேன். தோட்டம், என்னுடைய சிறு வயது கனவு. அது நினைவாகியது இங்கே கோவையில். தோட்டம் பற்றி நிறைய எழுத நினைத்திருக்கிறேன்.

அதை தவிர முடிந்தால் ஊர் கதைகள், கட்டுரை, நினைவுகள், பொழுது போக்கு என்று நிறைய எழுத ஆசை தான். முடிந்த அளவுக்கு சுவாரசியமாக எழுத முயற்சிக்கிறேன்.

1 comment:

  1. Vanakkam Shiva ungalai partha pin yanakum thotam poda aasyaga eruku nandri

    ReplyDelete