நம்ம ஊரில் ரொம்ப எளிதாக வரும் ஒரு மரம்
பப்பாளி. வளர்க்க கொஞ்சம் இடம் இருந்தாலும் போதும். விலை ரொம்ப மலிவாக கிடைப்பதால்
என்னவோ அதிகமாக யாரும் கண்டு கொள்வதில்லை. மைசூர் போகும் போது பவானி சாகர்
பகுதியில் நிறைய பப்பாளி தோட்டங்களை பார்க்க முடிந்தது. இப்போ பழமுதிர்
நிலையங்களில் நல்ல பழங்களை பார்க்க முடிகிறது. அப்படி வாங்கிய பழம் ரொம்ப இனிப்பாக
இருக்கவே அதன் விதையை எடுத்து முளைக்க போட்டேன். அருமையாக முளைத்து வளர
ஆரம்பித்தது.
பப்பாளி மரம் சில சடை சடையாக பூக்கும். ஆனால் காய்க்காது.
அதனால் வந்த நாற்றுக்களில் ஒரு மூன்றை காய்க்கும் வளர்த்து பார்க்கலாம் என்று
விட்டு விட்டோம். இப்போ மூன்றுமே கொத்து கொத்தாக காய்க்க ஆரம்பித்து விட்டது. வைத்த
ஒரு வருடத்திலேயே காய்த்து பழமும் சாப்பிட்டாச்சு. பழம் மிக இனிப்பாக
வந்திருக்கிறது. ஒரு பழம் கிட்டத்தட்ட 2 ½ கிலோ வரை
இருக்கிறது.
பப்பாளி மரத்தில் பொதுவாக வரும் ஒரு
பிரச்சினை மாவு பூச்சி தொல்லை. வெள்ளையாக படர்ந்து பூ, காய் என்று ஓன்று விடாமல்
கூடு கட்டி மரத்தை காலி பண்ணி விடும். ஆனால் கோவையில் அவ்வளவாக இந்த தொல்லை இல்லை.
வந்தால் இஞ்சி பூண்டு கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று இருக்கிறது. வராத
வரைக்கும் நல்லது J
விக்கியில் இருந்து, பப்பாளியின்
பயன்கள் என்று பார்த்தால், விட்டமின் ஏ அதிகமாக உள்ளது. கனிந்த பழத்தில் நிறைய விட்டமின்
சி இருக்கிறது. நிறைய மருத்துவ குணங்களை உள்ளடக்கியது பப்பாளி பழம்.
படங்கள் சில,