நாம் வழக்கமாய் போடும் செடிகளை தவிர,
எப்போதாவது வித்தியாசமாய் முயற்சிப்பது நம்ம தோட்டத்தை இன்னும் fresh-ஆக வைத்துக் கொள்ள உதவும். நாமாக முயற்சித்து அதில் ஓரளவுக்கு
வெற்றியும் கிடைத்தால் சந்தோசம் தானே.
முன்பு இது போல தான் உருளைகிழங்கு முயற்சி
செய்து ஓரளவுக்கு பலனும் கிடைத்தது. இப்போது கருணை
கிழங்கு. இதை பிடி கரணை என்றும் சொல்கிறார்கள். குழம்பு வைக்க வாங்கிய சில
கிழங்குகள் நல்ல Fresh-ஆ தெரிந்தது. முளை விடுவது போல இருந்தது.
சரி, ஒரு Try விட்டு பார்க்கலாம் என்று ஒரு மூன்று
கிழங்குகளை எடுத்து முளைக்க போட்டு விட்டேன்.
இது போல பெரிய செடிகளை (பப்பாளி, முருங்கை
செடிகள் போல) படத்தில் உள்ளது போல சின்ன Nursery Bag-ல்
போட்டு விடலாம். இந்த பைகள் விலை குறைவு தான். கிலோ கணக்கில் கிடைக்கிறது. நான்
போன முறை இங்கு Agri Index-ல் வாங்கினேன்.
கிழங்கை முளை விட்டு வர சரியாக ஒரு மாதம்
ஆனது. கொஞ்சம் பொறுமை அவசியம். எப்படி வரும் என்றே தெரியாமல் முயற்சிப்பதிலும் ஒரு
த்ரில்லிங் இருக்கு. சின்னதாய் ஒரு பூ மொட்டு மாதிரி வர ஆரம்பித்தது. அது பெரிதாகி
வெடித்து உள்ளே இருந்து ஒரு குடை போல இலைகள் விரிந்து செடி மலர்ந்தது. இரண்டு
செடிகளை தரையிலும், ஒன்றை ஒரு பெரிய Nursery Bag-லும்
வைத்து விட்டிருக்கிறேன்.
இந்த செடியில் ஒரு விஷேசம், செடியில்
குருத்து ஏதும் இல்லை. முதலில் வரும் மூன்று இலைகள் தான் இருக்கிறது. புதிதாய்
ஏதும் இலை வர குருத்து ஏதும் இல்லை. பக்க கிளை மட்டும் ஓன்று வருகிறது.
கிழங்கு வர இன்னும் நான்கு-ஐந்து மாதம் ஆகலாம் என்று நினைக்கிறேன். அதனால் இதை Part-1 ஆக கொடுக்கிறேன். எப்படி கிழங்கு வருகிறது என்பதை பொறுத்து சில மாதங்கள் கழித்து Part-2 வரலாம் :-)